search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடகை வீடு"

    • ஏழை பெண்களை ஆசை வார்த்தை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.
    • பரத் மற்றும் மகேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்து புரோக்கராக செயல்பட்டதும் தெரிய வந்தது.


    திண்டிவனம் ராஜா பேட்டை தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த கோவை மாவட்ட சேர்ந்த ஷர்மிளா பானு (38) உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில், குடும்ப வறுமையில் உள்ள ஏழை பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து வாடகை வீட்டை பிடித்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது.

    இவர்களுக்கு உடந்தையா க இருந்த புரோக்கர்கள் புதுவை மாநிலம் மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த பாவரதன் என்கின்ற பரத் (23) ஆரணி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (38), ஆகியோர் இருந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்களையும் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், ஷர்மிளா பானு, பரத் மற்றும் மகேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்து விபசாரம் நடத்தி வந்ததும், அதற்கு புரோக்கராக செயல்பட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலத்தில் வீடு வாடகைக்கு எடுத்து லாட்டரி தயாரித்து விற்ற கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் ஏெஜண்டுகளை நியமித்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும், தெரிந்தது

    சேலம்:

    சேலம் கருப்பூர் மேட்டுப்பதி சுடுகாடு அருகே தகரக்கொட்டகை வீட்டை வாடகைக்கு எடுத்து லாட்டரி சீட்டு விற்பதாக கருப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார், நேற்று மாலை அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு நம்பர் லாட்டரி சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த கருப்பூர் பனங்காட்டை சேர்ந்த ஏழுமலை (வயது 48), சங்ககிரி கேசவன் (35), கருப்பூர் செல்லப்பட்டி புதூர் செல்லதுரை (42) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்று வந்ததும், சேலத்தில் மட்டுமின்றி தமிழகம் ஏெஜண்டுகளை நியமித்து, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும், தெரிந்தது. அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 19 ஆயிரத்து 840 ரூபாய், மடிக்கணினி, உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×